மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மேற்கு வங்க இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு போஸ்டர் ஒட்டிய மத்திய அமைச்சர்

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளரின் போஸ்டரை சுவற்றில் ஒட்டினார்.

News image

போஸ்டர் ஒட்டும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

Updated On :22 செப்டம்பர் 2021, 7:26 am

PTI

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளரின் போஸ்டரை சுவற்றில் ஒட்டினார்.

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடவுள்ளார்.

Story image

இதையடுத்து, பாஜக வேட்பாளர் பிரியங்காவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று வீடுவீடாக சென்று பிரசாரத்தை மேற்கொண்டார்.

அப்போது, ஓர் வீட்டின் சுவற்றில் பாஜக வேட்பாளர் பிரியங்காவின் போஸ்டரை மத்திய அமைச்சர் ஓட்டியது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.