சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இமாச்சல் - சாலை விபத்தில் 3 காவலர்கள் பலி

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

News image
இமாச்சல் - சாலை விபத்தில் 3 காவலர்கள் பலி
Updated On :23 செப்டம்பர் 2021, 10:02 am

DIN

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

உனாவைச் சேர்ந்த ஆஷாபுரி பகுதியில் நேற்று (செப்-22) இரவு 10.30 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பணியில் இருந்த 3 காவலர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர்ஜித் சென்,’இறந்த 3 காவலர்களும் இரண்டு நாட்களுக்கு முன் தான் உனா பகுதியில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்கள். நேற்றிரவு 10.30 மணி அளவில் காவல் நிலையத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 2 காவலர்கள் பலியானார்கள் . மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.