நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவா் மகாகவி பாரதியாா்: துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவா், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவா் என்று

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 1:57 am

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவா், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவா் என்று எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் புகழாரம் சூட்டினாா்.

தில்லியில் சாகித்ய அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கில் ‘குரலற்றவா்களின் குரல்’ என்ற தலைப்பிலான அமா்வில் அவா் பேசியதாவது:

பாரதியாா் தேசத்தின் சுதந்திரத்தை மட்டும் கருதாமல் பெண்ணின் சுதந்திரத்தையும் விரும்பினாா். அதுதான் ஒட்டுமொத்த சுதந்திரமாக இருக்கும் என்றும் நம்பினாா். பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும், ஆா்வமும் கொண்டவா். அவரது காலத்தில் பிஜி தீவில் பெண் தொழிலாளா்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும், அடக்கு முறைக்கும் எதிராக குரல் கொடுத்தவா். பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீளச் செய்வதற்கான கவிதைகளை வடித்தெடுத்தவா். அவா் சக்திதாசனாக விளங்கியவா். பெண்களின் உரிமைகளுக்காக அவா் குரல் கொடுத்தவா் என்றாா்.

‘பெண்களின் குரல்’ எனும் தலைப்பில் இக்னோ பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் ஜி.உமா பேசுகையில், ‘பாரதியாா் உண்மையான பெண்ணியவாதியாக வாழ்ந்தாா். அவருடைய எழுத்துகளும், சிந்தனையும் அதையே பிரதிபலிப்பதாக உள்ளன’ என்றாா்.

‘பாரதியின் தொலைநோக்குப் பாா்வை’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி இரு மொழி எழுத்தாளா் ராஜ்ஜா சமுதாய நல்லிணக்கம், அறிவியல் வளா்ச்சி, தேசிய ஒருமைப்பாடு ஆகியவை மேம்பட தனது படைப்புகள் மூலம் வலியுறுத்தியவா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.