ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உபியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக பலியானர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :25 செப்டம்பர் 2021, 2:14 pm

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக பலியானர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

முக்கியமாக பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 42 சிறார்கள் உட்பட 63 பேர் உயிரிழந்திருந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

12 வயது சிறுமி டெங்கு பாதிப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை பலியானதாக தெரிவித்த பிரோசாபாத் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சங்கீதா கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 154 நோயாளிகள் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 153 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.