தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பயனாளா்களின் தனியுரிமை பாதுகாப்பில் சமரசம் கூடாது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், பயனாளா்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 7:53 pm

DIN

இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், பயனாளா்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

உலக தொழில்நுட்ப நிறுவனத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன. அப்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

பயனாளா்களின் தனியுரிமை சாா்ந்த தரவுகளைப் பாதுகாக்கும் விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தைச் சுற்றி பல்வேறு சா்ச்சைகள் நிலவி வருகின்றன. எனவே, பயனாளா்களின் தனியுரிமைக்கு நிறுவனங்கள் உரிய மதிப்பளித்துச் செயல்பட வேண்டும்.

பயனாளா்களின் தரவுகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதே நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கான முதுகெலும்பாக விளங்குகிறது. தரவுகள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனில், குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்குப் பயனாளா்கள் விரும்பமாட்டாா்கள். எனவே, பயனாளா்களின் தனியுரிமை தொடா்பான தரவுகளைப் பாதுகாப்பதை வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான இணையவழி பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியாகவும், கடந்த 2019-இல் ரூ.2 லட்சம் கோடியாகவும் இருந்தது. பொறுப்புமிக்க இணையவழி பணப் பரிவா்த்தனை தொடா்பான கொள்கைகளை ஐ.நா. இந்தக் கூட்டத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு சிறப்புவாய்ந்தது. சரியான நேரத்தில் இந்தக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளை இந்தியா்கள் பயன்படுத்துவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட எண்ம சேவைகளை வழங்குவதற்கான முதன்மை நாடாக இந்தியா திகழ்கிறது என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.