தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 3 நபர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 86,526 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 28,395 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 33 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தில்லியில் இதுவரை பதிவாகிய ஒருநாள் கரோனாவில் இது அதிகபட்சம் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.