ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் கைது

தில்லி ஜந்தர் மந்தரில் வன்முறையை தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி ஜந்தர் மந்தரில் வன்முறையை தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை ஏற்பாடு செய்த அஸ்வினி உபாத்யாய் உள்பட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரிடம் நேற்று இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.

போராட்டத்தின்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பும் விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

'ராம், ராம்' என முழக்கம் எழுப்புபவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கும் விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் இருக்க வேண்டுமானால் ஜெய் ஸ்ரீ ராம் என முழங்க வேண்டும் என அவர்கள் கூறுவது வுிடியோவில் பதிவாகயுள்ளது.

தில்லி பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள அஸ்வினி உபாத்யாய் திங்கள்கிழமை வரை கைது செய்யப்படவில்லை. முன்னதாக, கரோனாவை காரணம்காட்டி போராட்டம் மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com