புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் நாளை (ஆக.12) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடபட்டது. ஆனால், கரோனா பரவலால் ராக்கெட் ஏவுதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | மாநிலங்களவையில் நிறைவேறியது ஓபிசி மசோதா
இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ள நிலையில், மீண்டும் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி இஓஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதையும் படிக்க | மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு
இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். இஓஎஸ்-03 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதிலுள்ள 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். வானிலை சூழல்களை கண்காணித்து புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனா்.