மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினார்.
தில்லி சென்றுள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 1,869 பேருக்கு கரோனா தொற்று
இந்த சந்திப்பின்போது பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | 6 நாள்களில் 8 முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள்
மேலும் மருத்துவ பூங்கா அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கும் மத்திய அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளதாக அமரீந்தர் சிங் பேட்டியின் போது குறிப்பிட்டார்.