காஷ்மீர் : பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்
சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் தீவிரவாதிகள் சிக்கிக்கொள்வதும் பின் தாக்குதலில் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர் சிக்கலுக்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் 370?
நேற்று (புதன்கிழமை) காலை பந்திபோரா மாவட்டத்தில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில் இன்று காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.