சாதிவாரி கணக்கெடுப்பு அனுமதி: 'பிரதமரை சந்திக்க காத்திருக்கிறேன்'

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
நிதீஷ் குமார்  (கோப்புப் படம்)
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
Updated on
1 min read


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி பிரதமருக்கு அனுப்பப்பட்ட எனது கடிதம் பெறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும். பிரதமர் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருக்கிறோம்'' என்று கூறினார். 

நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கடந்த 9-ம் தேதி பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com