
இந்தியா வங்கதேசம் இடையே ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா - வங்கதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தவாரம் முதல் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்கதேச விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
படிக்க | காபூலிலிருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உதவியவர்களுக்கு நன்றி: ஜெய்சங்கர்
இரு நாடுகளுக்கு இடையே படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திலிருந்து தில்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லியிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.