தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 69,160 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 25 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தயார்: கேரளம்
மேலும் 2 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,217 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,11,690 பேர் குணமடைந்துள்ளனர். 25,079 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் 448 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.