குஜராத் மாநிலம் வடமேற்கு ராஜ்கோட் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
குஜராத் மாநிலம் வடமேற்கு ராஜ்கோட் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 12.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 150 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.