ஆப்கன் விவகாரம்: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆக. 26-ல் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆகஸ்ட் 26இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைக்கிறார்.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆக. 26-ல் ஜெய்சங்கர் ஆலோசனை
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆக. 26-ல் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆகஸ்ட் 26இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைக்கிறார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், ஆப்கனில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்

மேலும், இந்த கூட்டமானது ஆகஸ்ட் 26ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com