இந்தியாவில் இன்று மேலும் 25,072 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,072 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,49,306 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 389 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,34,756 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 44,157 போ் குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க- அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இதுவரை 3,16,80,626 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 3,33,924 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 7,95,543 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 58,25,49,595 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 12,95,160 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 50,75,51,399 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.