நாட்டில் இதுவரை 57.16 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 58.82 கோடிக்கும் அதிகமானோருக்கு (58,82,21,623) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,604 பேருக்கு கரோனா; 25 பேர் பலி
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 56 லட்சத்திற்கும் அதிகமான (56,10,116) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவில் இதுவரை 29,49,943 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 7,82,974 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.
இதையும் படிக்க | தில்லியில் 13-வது நாளாக கரோனா பலி இல்லை: புதிதாக 17 பேர் பாதிப்பு
நாட்டில் இதுவரை மொத்தம் 45,55,21,465 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 13,27,00,158 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.