15 மாதங்களுக்குப் பிறகு ஓய்ந்த கரோனா: லுதியானா மக்கள் நிம்மதி!

பஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் முதன்முறையாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் முதன்முறையாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் செவ்வாய்க்கிழமை 9,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒருவருக்குக்கூட நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

15 மாதங்களுக்குப் பிறகு நோய் பாதிப்பு பதிவாகாமல் இருப்பது இதுவே முதன்முறை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

“மக்களின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது. கரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க அரசு வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றக்கோரி கேட்டுக்கொண்டுள்ளோம்.”

லுதியானாவில் 45 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 18 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com