கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காபூலிலிருந்து மேலும் 24 இந்தியர்கள் வருகை

​ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஆகஸ்ட் 2021, 3:06 am

DIN


ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள சொந்த குடிமக்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இந்தியாவும் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது 24 இந்தியர்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 35 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேலும் 180 பேர் வரை வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.