காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் பகுதியில் தீவிரவாதிகள் அங்கிருந்த காவலர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த 2 காவலர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதனால் , அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.