1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது
நாடு முழுவதும் 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பிய நபரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது

கைது
நாடு முழுவதும் 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பிய நபரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக தில்லி உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை மற்றும் பல கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன.
இந்த சம்பவத்தில் கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட 47 வயதான ஸ்ரீனிவாஸ் லூயிஸ், வாடகை வீட்டில் இருந்து சனிக்கிழமை தில்லி போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் குழுக்களால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
லூயிஸ் ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் வேலையின்றி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையின்போது, மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் வழியாக நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகளை அனுப்பியதாக அவர் ஒப்புக்கொண்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...