பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, சூடுபிடித்துள்ள பஞ்சாப் அரசியல் களத்தை இது மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
Picture loaded with possibilities â¦. With Bhajji the shining star pic.twitter.com/5TWhPzFpNl
â Navjot Singh Sidhu (@sherryontopp) December 15, 2021
ஹர்பஜனுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து சித்து, "பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கிய புகைப்படம். ஷைனிங் ஸ்டார் பஜ்ஜியுடன்" என பதிவிட்டுள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜகவில் சேரவுள்ளதாக வெளியான செய்திக்கு ஹர்பஜன் மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த மக்களவை தேர்தலிலிருந்தே, அவர் அரசியலில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. "ஏற்கனவே, அரசியலில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் உள்ளனர். எனவே, அரசியலில் சேர்வதற்கான திட்டம் எதுவும் இல்லை" என ஹர்பஜன் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்துவரும் அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் ஹர்பஜனை களமிறக்க பாஜக திட்டமிட்டதாகவும், அவரை தொடர்புகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க | லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு
ஹர்பஜனை தங்கள் கட்சியில் இணைத்து கொள்வதால் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கிடையே நடைபெற்ற அதிகார போட்டி காரணமாக, பஞ்சாப்பை வென்று விடலாம் பாஜக நம்பிவருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 117 தொகுதிகளில் மூன்று இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம்: நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயா்வு

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் பிரதமரிடம் தேமுதிக எம்.பி. கோரிக்கை
ஜந்தா் மந்தருக்கு பதிலாக மாற்று போராட்ட இடம்: மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


