நாட்டில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா; 8,706 பேர் மீண்டனர்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாட்டில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா; 8,706 பேர் மீண்டனர்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 289 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,77,158. நேற்று வெள்ளிக்கிழமை 8,706 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,71,471 

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 84,565 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 569 நாள்களில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 66,28,97,388 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,45,402 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் இதுவரை 1,36,66,05,173 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com