மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அறிவித்தார்.
இதுபற்றி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது:
"நாடு முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு நீட் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் தேசிய தேர்வு முகமை தளத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.
சமூக இடைவெளியை உறுதிபடுத்தும் வகையில் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155-இல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். தேர்வு மையத்தில் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்படும்."