சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கரோனா தடுப்பு: மாநிலங்களுக்கு இதுவரை ரூ.40,000 கோடி

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.40,000 கோடி வரை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக

Published On :

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.40,000 கோடி வரை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் திலிப் சைக்கியா மற்றும் ரமேஷ்சந்தா் கெளசிக் ஆகியோா் எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலுரையில் கூறியதாவது:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், கரோனா பாதிப்பால் எழுந்த பொது சுகாதார சவால்களை சமாளிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசு அளித்து வந்திருக்கிறது. மேலும், தேசிய சுகாதார திட்டத்தின் (என்ஹெச்எம்) திட்டத்தின் கீழும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில், கரோனா பாதிப்பு நிலைமையை சமாளிப்பதற்காக என்ஹெச்எம் திட்ட நிதியுதவியைத் தாண்டி மாநிலங்களுக்கு ரூ. 1,113.21 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஏப்ரல் மாதம் ‘இந்திய கரோனா அவசர நடவடிக்கை மற்றும் சுகாதார திட்ட முன்னேற்பாடு திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி அளிக்கப்பட்டது. இதே திட்டத்தின கீழ் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.8,257.88 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, ‘இந்திய கரோனா அவசர நடவடிக்கை மற்றும் சுகாதார திட்ட முன்னேற்பாடு திட்டம்’ பகுதி-2 திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 23,123 கோடி ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 15,000 கோடி அளிக்கப்பட்டது. மாநில பங்கு ரூ.8,123 கோடியாகும்.

கிராமப்புறங்கள், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகள் மற்றும் புகா் பகுதிகளில் சுகதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருந்துகள் கொள்முதல், அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி வழி மருத்துவ உதவிகளை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்ததல், மருத்துவமனை மேலாண்மை தகவல் திட்டத்தை மேம்படுத்ததல் என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது என்று மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

Image Caption

நித்யானந்த் ராய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.