வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புதிய அரசு எப்படி இருக்கும்? கர்நாடக முதல்வர் பொம்மை விளக்கம்

புதிய அரசு மக்கள் மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும் என கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜூலை 2021, 3:28 pm


புதிய அரசு மக்கள் மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும் என கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கு கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை கூறியது:

"தற்போதைய சூழலில் இது மிகப் பெரிய பொறுப்பு. ஏழைகளின் நலனுக்கு செயல்பட பாடுபடுவேன். இது மக்கள் சார்பு மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும்" என்றார் அவர்.

இதுகுறித்து காபந்து முதல்வர் எடியூரப்பா கூறியது:

"பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பசவராஜ் பொம்மையை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி. பிரதமரின் தலைமையின்கீழ் பொம்மை கடுமையாக உழைப்பார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.