புதிய அரசு மக்கள் மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும் என கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கு கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை கூறியது:
"தற்போதைய சூழலில் இது மிகப் பெரிய பொறுப்பு. ஏழைகளின் நலனுக்கு செயல்பட பாடுபடுவேன். இது மக்கள் சார்பு மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும்" என்றார் அவர்.
இதுகுறித்து காபந்து முதல்வர் எடியூரப்பா கூறியது:
"பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பசவராஜ் பொம்மையை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி. பிரதமரின் தலைமையின்கீழ் பொம்மை கடுமையாக உழைப்பார்."