புதிய அரசு மக்கள் மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும் என கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கு கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை கூறியது:
"தற்போதைய சூழலில் இது மிகப் பெரிய பொறுப்பு. ஏழைகளின் நலனுக்கு செயல்பட பாடுபடுவேன். இது மக்கள் சார்பு மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும்" என்றார் அவர்.
இதுகுறித்து காபந்து முதல்வர் எடியூரப்பா கூறியது:
"பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பசவராஜ் பொம்மையை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி. பிரதமரின் தலைமையின்கீழ் பொம்மை கடுமையாக உழைப்பார்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

மாநில உரிமையை பாதிக்காத தொகுதி மறுவரையறை தேவை: டாக்டா் க. கிருஷ்ணசாமி

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


