ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பெட்ரோல் விலை உயர்வு: நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா வியாழக்கிழமை சைக்கிளில் வந்தார்.

News image

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.

Updated On :29 ஜூலை 2021, 7:49 am

ANI

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா வியாழக்கிழமை சைக்கிளில் வந்தார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கேரளத்தில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்திற்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரிபுன் போரா, பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சைக்கிளில் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடன் பேசிய அவர், “பெட்ரோல் மற்றும் பிற பொருள்களின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வேறு எங்கு விவாதிப்பது?” எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.