டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். 

News image
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிவபெருமானை தரிசனம் செய்தார்.
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN



உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். 

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்வதற்கும், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைப்பதற்காகவும் பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் டேராடூன் விமான நிலைய வந்தார். அவரை உத்தரகண்ட் ஆளுநர் குர்மித் சிங் மற்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.

Story image

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வணங்கினார். 

Story image

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்து வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி. 

பின்னர் கேதார்நாத் கோயிலில் ஆரத்தி செய்து சிவபெருமானை வழிபாடு செய்தார். பிரார்த்தனைக்குப் பிறகு கேதார்நாத் கோயிலை மோடி வலம் வந்தார்.

Story image

கேதார்நாத் சிவன் கோயில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.

Story image

மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கேதார்நாத் சிவன் கோயில்.

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்த மோடி, 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட உத்தரகண்ட் வெள்ள பாதிப்புக்குப் பின்னர் சமாதி புனரமைக்கப்பட் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்து வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.