விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பானி குடும்பம் லண்டனில் குடியேறுகிறதா? - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளத

News image

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி

Updated On :6 நவம்பர் 2021, 10:25 am IST

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் உள்ள 400,000 சதுர அடியில் அல்டாமவுண்ட் சாலையில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹாட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை ரூ.592 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் மற்றும் குடும்பத்தினர் 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை. அவை தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்கள் அடிப்படையில் வெளியான செய்திகள் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் "லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை" என்பதை அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், ஸ்டோன் பார்க் பங்களாவை திட்டமிடல் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளூர் விதிமுறைகளுடன் முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறது." 

அதே நேரத்தில், லண்டனில் வாங்கிய 300 ஏக்கர் நிலம், தங்களது பொழுதுபோக்கு விடுதியை விரிவுப்படுத்தவே என்றும், இது இந்தியாவின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு துறையின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்தும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.