மகாராஷ்டிரம்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 கரோனா நோயாளிகள் பலி

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 10 கரோனா நோயாளிகள் பலியாகினர்.
மகாராஷ்டிரம்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 கரோனா நோயாளிகள் பலி
மகாராஷ்டிரம்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 கரோனா நோயாளிகள் பலி


புணே: மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 10 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

அகமதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸலே இது பற்றி கூறுகையில், அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 10 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

தீ விபத்து 11 மணிக்கு நேரிட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 10 கரோனா நோயாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com