இந்துத்துவவாதிகள் சீக்கியர்களையும், இஸ்லாமியர்களையும் தாக்கச் சொல்பவர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘ஜன் ஜக்ரன் அபியன்’ என்கிற தலைப்பில் தேசிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி வர்தாவில் இன்று நடந்தது.
அப்போது பார்வையாளர்களிடம் கானொலி மூலம் உரையாற்றிய ராகுல் காந்தி ‘இந்து மதத்திற்கும் இந்துத்துவவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேட்ட பின் ‘ இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையென்றால் ஏன் வேறுவேறு பெயர்களை வைத்திருக்கிறார்கள். வித்தியாசம் இருக்கிறது. இந்து மதம் சீக்கியர்களையும் , இஸ்லாமியர்களையும் தாக்குமா? ஆனால் இந்துத்துவவாதிகள் கண்டிப்பாகத் தாக்குவார்கள்’ எனத் தெரிவித்தார்.
மேலும் உரையில் , நம்முடைய சித்தாந்தங்களை பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக கொண்டு செல்லலாததால் தான் அது மறைந்து கிடக்கிறது என்றார்.