இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இஎஸ்ஐ மாதச் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு சந்தா தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

இஎஸ்ஐ மாதச் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Updated On :16 நவம்பர் 2021, 10:08 am

DIN


பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான மாநில தொழிலாளர் ஈட்டுறுதி சந்தா தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு கழகத்தின் இயக்குநர், அனைத்து மண்டல இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தகவல் தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக, ஆன்லைன் மூலம் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் சந்தா தொகையை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதி தொகையை செலுத்த நவம்பர் 15 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் காலக்கட்டத்துக்கான திருப்பியளிக்கப்படும் பங்களிப்புத் தொகையை செலுத்த நவம்பர் 11 கடைசி தேதியாக இருந்த நிலையில், அது டிசம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.