கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பலத்த மழையைப் பொருட்படுத்தாது சபரிமலையில் பக்தர்கள் வழிபாடு

பலத்த மழை, கரோனா சூழலையும் தாண்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2021, 10:19 pm

DIN

பலத்த மழை, கரோனா சூழலையும் தாண்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர். இத்துடன் வருடம்தோறும் இரண்டு மாத காலம் நடைபெறும் சபரிமலை மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது.
 மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோயில் கருவறையில் உள்ள பாரம்பரியமான விளக்கை செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்றி வைத்தார். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
 வழக்கமாக ஐயப்பன் சந்நிதானத்தில் மலையாள மாதமான விருச்சிகம் (கார்த்திகை மாதம்) முதல் தேதி பக்தர்கள் கடல் போலக் குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவிலான பக்தர்களே சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். பலத்த மழை பெய்து வருவதால் அடுத்த மூன்று நான்கு நாள்களுக்கு பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பம்பை நதியில் நீர்மட்டம் அபாய அளவில் பாய்வதால் நதியில் புனித நீராடலுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தை தந்திரி கண்டரரு மோகனரரு முன்னிலையில், ஓய்வு பெற உள்ள மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் போற்றி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
 இந்த யாத்திரை காலத்தில் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் 30,000 பக்தர்களை மட்டும் அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி யாத்திரை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 41 நாள்கள் நடைபெறவுள்ள மண்டல பூஜைக் காலம் டிசம்பர் 26-ஆம் தேதி நிறைவடையும். அதன் பிறகு யாத்திரையின் இரண்டாம் கட்டமான மகரவிளக்கு பூஜைக் காலத்தையொட்டி கோயில் டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-இல் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததும் ஜனவரி 20-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.