தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம்: பக்கெட்டில் பறிமுதல் செய்த அதிகாரிகள்

கர்நாடகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் அரசு அதிகாரி வீட்டில் தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 

News image
தண்ணீர் குழாயில் பதுக்கப்பட்ட பணம்: பக்கெட்டில் பறிமுதல் செய்த அதிகாரிகள்
Updated On :28 ஜனவரி 2024, 5:32 am

DIN

கர்நாடகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் அரசு அதிகாரி வீட்டில் தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனை அதிகாரிகள் பக்கெட்டுகள் மூலம் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகள் வீடுகள் உள்பட 60 இடங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று (நவ.24) காலை முதல் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துகள், பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் கர்நாடக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஷாந்தா கெளடா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரது வீட்டின் பின்புறம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

தண்ணீர் குழாய்களை உடைத்து பக்கெட் மூலம் பணத்தை அதிகாரிககள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மட்டும் ரூ.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.