கர்நாடகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் அரசு அதிகாரி வீட்டில் தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அதிகாரிகள் பக்கெட்டுகள் மூலம் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகள் வீடுகள் உள்பட 60 இடங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று (நவ.24) காலை முதல் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துகள், பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் கர்நாடக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஷாந்தா கெளடா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரது வீட்டின் பின்புறம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
தண்ணீர் குழாய்களை உடைத்து பக்கெட் மூலம் பணத்தை அதிகாரிககள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மட்டும் ரூ.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 20 2026) 12 ராசிகளுக்கும்! பதவி உயர்வு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 20) மிதுன ராசிக்கு வெற்றி!

வைணவ பக்திப் பாடல்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணிகள் தொடக்கம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்






