மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

லக்கிம்பூர் சம்பவம்: பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் உதவித்தொகை அறிவிப்பு

லக்கிம்பூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் சார்பில் தலா ரூ. 50 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

News image

பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் உதவித்தொகை அறிவிப்பு

Updated On :6 அக்டோபர் 2021, 9:48 am

லக்கிம்பூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் சார்பில் தலா ரூ. 50 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் சென்றுள்ளனர்.

அப்போது முதல்வர் சரண்ஜீத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு துணையாக நிற்போம். பஞ்சாப் அரசு சார்பில் இச்சம்பவத்தில் பலியான விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.”

அதேபோல், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷும் ரூ. 50 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.