போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் உள்பட 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை நாளை (அக்.7) நடைபெறுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 3 நாள்கள் காவலுக்கு பிறகு ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஆர்யன் கான் தரப்பு வழக்குரைஞர் சதிஷ் மனிஷிண்டே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.