ஷாருக்கான் மகனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷாருக்கான் மகனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்
ஷாருக்கான் மகனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்யன் கான் ஜாமின் கோரிய நிலையில், அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கானின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் காவலை அக்டோபர் 11 வரை நீட்டிக்க மும்பை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஏற்கெனவே விசாரணைக்கு போதிய அளவு கால அவகாசம் கொடுக்கப்பட்டதால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவல் மேலும் தேவையில்லை என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

இதனைத் தொடர்ந்து ஆர்யன் கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட் உள்பட 6 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com