திருவனந்தபுரம்: கடந்த 2019ஆம் ஆண்டில் கேரளத்தில் குழந்தை பெற்ற 20,995 பேர் சிறுமிகள் என்ற அதிர்ச்சித் தகவல் பொருளாதார மற்றும் புள்ளியல் துறை வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
குழந்தை திருமணம் எனும் கொடிய அரக்கனிடமிருந்து கேரளம் மிக மோசமாக சிக்கிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாக இந்த புள்ளி விவரம் அமைந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்
இந்த 20,995 தாய்மார்களும் 15 வயதுக்கு உள்பட்டவர்கள். அது மட்டுமல்ல, மேலும் அதிர்ச்சியடையும் வகையில், இவர்களில் 19,316 பேர் தங்களது இரண்டாவது குழந்தையையும், 59 பேர் 3வது குழந்தையையும், 16 பேர் நான்காவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளனர் என்கிறது விட்டல் புள்ளியில் அறிக்கை 2019.
மேற்கண்ட இந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளித்தாலும், அடுத்து வரும் தகவல் சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். பொதுவாக நகர்ப் பகுதிகளை விடவும் கிராமப் பகுதிகளில்தான் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் தூசுபோல தட்டிவிட்டு, 21 ஆயிரம் சிறுமிகளில் நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 15,248 பேர் என்கிறது புள்ளி விவரம். கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 5,747 பேர். 57 பேரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள்.
அடுத்த புள்ளி விவரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்?
2019ஆம் ஆண்டு நடந்த பிரசவங்கள் 4.80 லட்சம். இதுவே 2018ல் 4.88 ஆக இருந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2019ல் பிறந்த 4,80,113 குழந்தைகளில் 2,44,953 ஆண் குழந்தைகள், 2,35,129 பெண் குழந்தைகள். இதன் மூலம் அந்த ஆண்டில் கேரளத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் பிறந்துள்ளன என்பது தெளிவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



