மகாராஷ்டிர மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் லக்னெள - மும்பை இடையிலான விரைவு ரயில் 20 வயது பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
காட்புரி - கசரா பகுதிகளுக்கு இடையே சுரங்கத்திற்குள் ரயில் சென்றபோது ரயிலில் கத்தி உள்பட தோல் பொருள்களுடன் இருந்த மர்ம நபர்கள் 8 பேர் பயணிகளை மிரட்டியுள்ளனர்.
20 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற அவர்கள், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அரசு ரயில்வே காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்போது சக பயணிகள் கூச்சலிட்டதில் வேகமாக செயல்பட்ட காவல் துறையினர் உடனடியாக 4 பேரை கைது செய்தனர். எஞ்சிய 4 பேர் தப்பியோடினர். அவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இன்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். எட்டு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்துதல், அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.