கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 515 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,81,732 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,34,085 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,906 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 17,983 பேருக்கு கரோனா
இன்றைய நிலவரப்படி 9712 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.