தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 61,094 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 38 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,252 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,13,798 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 365 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,29,181 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 1,91,89,181 பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.