லக்கிம்பூர் கேரிக்கு இன்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செல்லவுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை லக்னெள வந்தடைந்த பிரியங்கா, அங்கிருந்து காரில் லக்கிம்பூர் செல்கிறார்.
முன்னதாக, கடந்த வாரம் பலியான விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து பிரியங்கா ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.