மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தோ்வு

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2022-24-ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினா் பதவிக்கு இந்தியா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 1:24 am

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2022-24-ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினா் பதவிக்கு இந்தியா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினா் பொறுப்புக்கான தோ்வு 76-ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் பதிவாகின.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ். திருமூா்த்தி கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக பெருவாரியான வாக்குகளுடன் இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தத் தோ்வு, இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், பன்முகத்தன்மை, அரசியல் சாசனம் அளிக்கும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட அங்கிகாரமாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.