கேரளத்தில் புதிதாக 11,150 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 14-ம் தேதி முதல் தினரசி பாதிப்பு 10 ஆயிரத்துக்குக் கீழ் பதிவாகி வந்தது. இந்த நிலையில் மீண்டும் புதன்கிழமை 11,150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,70,584 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் பலி: பினராயி அறிவிப்பு
மேலும் 82 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 27,084 ஆக உயர்ந்துள்ளது. 8,592 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 47,69,373 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 82,738 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 94,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 348 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.