கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அசாம் மாநிலத்தில் இரவுநேரப் பொதுமுடக்கத்தை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.12 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரிவருவாய்
இந்நிலையில் அசாமில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் 10க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் உறுதியான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தின்போது வணிகவளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


