இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்திற்காக பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. இருப்பினும், பெண்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே. கெளல், சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு, "என்டிஏ-வில் பெண்களை சேர்க்க பாதுகாப்பு படை அனுமதி வழங்கிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீர்திருத்தம் என்பது ஒரே நாளில் நடைபெறவது அல்ல. அதற்கான செயல்முறை மற்றும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை அரசே அமைக்கும்.
பாதுபாப்பு படை முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக, பாலின சமத்துவத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிடும் வரை காத்திருக்காமல் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தது.
இந்த விவகாரத்தில், செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேசிய பாதுகாப்பு அகாதெமிக்கான நுழைவு தேர்வில் பெண்கள் கலந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



