தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர்வதற்கு அனுமதி: மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர பாதுகாப்பு படை அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 செப்டம்பர் 2021, 3:40 pm IST

இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்திற்காக பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. இருப்பினும், பெண்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே. கெளல், சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு, "என்டிஏ-வில் பெண்களை சேர்க்க பாதுகாப்பு படை அனுமதி வழங்கிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீர்திருத்தம் என்பது ஒரே நாளில் நடைபெறவது அல்ல. அதற்கான செயல்முறை மற்றும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை அரசே அமைக்கும்.

பாதுபாப்பு படை முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக, பாலின சமத்துவத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிடும் வரை காத்திருக்காமல் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேசிய பாதுகாப்பு அகாதெமிக்கான நுழைவு தேர்வில் பெண்கள் கலந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.