25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர்வதற்கு அனுமதி: மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர பாதுகாப்பு படை அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :28 ஜனவரி 2024, 9:36 am IST

இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்திற்காக பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. இருப்பினும், பெண்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே. கெளல், சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு, "என்டிஏ-வில் பெண்களை சேர்க்க பாதுகாப்பு படை அனுமதி வழங்கிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீர்திருத்தம் என்பது ஒரே நாளில் நடைபெறவது அல்ல. அதற்கான செயல்முறை மற்றும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை அரசே அமைக்கும்.

பாதுபாப்பு படை முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக, பாலின சமத்துவத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிடும் வரை காத்திருக்காமல் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேசிய பாதுகாப்பு அகாதெமிக்கான நுழைவு தேர்வில் பெண்கள் கலந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.