நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க | குஜராத்தில் மீண்டும் இரவுநேர பொதுமுடக்கம் அறிவிப்பு
தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான ஆந்திரத்தில் கடந்த செப்-11 முதல் 13 வரையில் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களால் தான் இத்தனை பெரிய சாதனை நிகழ்ந்திருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் முகாம் நடந்த மூன்று நாட்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18-44 வயது உடையவர்கள் மட்டும் 28.36 லட்சம் என்றும் மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியைக் கடந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 75.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.