குஜராத் மாநிலத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் இரவுநேர பொதுமுடக்கத்திலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க | கோவேக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்?: சுகாதாரத்துறை விளக்கம்
இந்நிலையில் காந்திநகர், வதோரா, ராஜ்கோட், ஜம்நகர், ஆமதாபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் செப்டம்பர் 15 முதல் 25 வரை இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | காலநிலை மாற்றத்தால் 21.6 கோடி மக்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்
மேலும், மாநிலம் முழுவதும் நேற்று 12 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெறும் 161 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.