மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

குஜராத்தில் மீண்டும் இரவுநேர பொதுமுடக்கம் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 செப்டம்பர் 2021, 10:55 am

குஜராத் மாநிலத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் இரவுநேர பொதுமுடக்கத்திலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காந்திநகர், வதோரா, ராஜ்கோட், ஜம்நகர், ஆமதாபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் செப்டம்பர் 15 முதல் 25 வரை இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் நேற்று 12 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெறும் 161 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.