அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

News image

உயிரிழந்த விமானிகள்

Updated On :21 செப்டம்பர் 2021, 3:27 pm IST

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மேஜர் ரோஹித் குமார் மற்றும் மேஜர் அனுஜ் ராஜ்புட் ஆகிய இரு விமானிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ளனர்.

ஆனால், மலைப் பகுதியில் தரையிறக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த இரண்டு விமானிகளையும் படுகாயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இரு விமானிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.