இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4.45 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 383 பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலி எண்ணிக்கை 4.45 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
இதையும் படிக்க | சென்னையில் கரோனா தடுப்பூசி, கரோனா நோயாளிகளின் முழு நிலவரம்
நேற்று (செப்-21) நிலவரப்படி புதிதாக 26,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 3.35 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,45,784 பதிவாகியிருக்கிறது.
மேலும் நாட்டில் 82.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் 25.88 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.